விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானது.
இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது.
பல
குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப்
பாதுகாத்து வைத்துள்ளனர். சிலர் தம்
முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து,
எரியும்படி கவனித்துக்
கொள்கின்றனர்.
புதுமனை
புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால்
பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும்
விளக்கும் காமாட்சி அம்மன்திருவிளக்கே.
Comments
Post a Comment