Skip to main content

கடுக்காய் பொடி

நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய   பங்கு வகிக்கிறது. கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது
புராணங்களிலும் இம்மரத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாயகம் இந்தியா தான். 
கடுக்காயின் பயன்கள் :
1. இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
2.
பிராண வாயு அதிகரிக்கிறது
3. வாய் மற்றும்குடல் புண்களை ஆற்றும்
4. மலசிக்கலை நீங்குகிறது.
5. இளமையாக வைத்திருக்கும்.
6.
வாழ்நாளை அதிகரிக்கிறது.
7.
வாய் துர்நாற்றம் அகலும்.                               
8. . காது,கண் நோய் குணப்படுத்தும்            
9.  இளநரை போக்குதல்
10 . உடல் எடை குறைதல்
கடுக்காய் பொடியை பயன்படுத்தும் முறை :
    மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து  துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்
     கற்கண்டுடன் கடுக்காய்பொடி கலந்து காலை, மாலை அரை  தேக்கரண்டி எடுத்து வெந்நீறுடன் குடிக்க குடல்புண், சுவாச காசம், மூலம், வாதநோய்கள் குணமாகும்.
      மூக்கில் ரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய் பொடியை எடுத்து மூக்கால்உறிய ரத்தம் வருவது நின்றுவிடும்.  
      பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.
         கண்களை சுற்றியுண்டாகும் கருவளையத்தை போக்க கடுக்காய் சிறந்தது. கடுக்காய் பொடியை பன்னீரில் கலந்து கண்களை சுற்றி பூசவேண்டும். பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். சில முறை செய்தால் நல்ல பலன் கிட்டும்.
         கோடை காலத்தில் சிறிதளவு வெல்லத்தூளுடன், அரை தேக்கரண்டி கடுக்காய் பொடி கலந்து சாப்பிடலாம். தினமும் இரவு படுக்கச்செல்லும் முன்பு 5 கிராம் கடுக்காய்தூளை சூடான நீரில் கலந்து பருகலாம். இதனால் உடல் இயக்கம் சீரடையும். நோய் அண்டாது. இளமையோடு நீண்ட காலம் வாழலாம்.






Comments

Popular posts from this blog

108 ஹோம திரவியம்

                  ஓம திரவியம் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.   கணபதி ஹோமம்,லக்ஷ்மி பூஜை,நவரத்ன பூஜை,ஆயுஷ் ஹோமம் ,மிருதின்ஜ்ய ஹோமம்,தன்வந்தரி ஹோமம்,    பூமி பூஜை இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன.               

ஸ்வர்ண புருஷ் லேகியம்

உடல்நலம் மற்றும் உயிர் வளத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்புகளை வளர்க்கிறது. ஸ்வர்ணா புருஸ்   ஒரு முழுமையான உடல் மற்றும் மன உறுதி அளிக்கிறதுஆண் பாலியல் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சரியான மருந்து இது. பருமனான பலவீனம் , விறைப்பு குறைபாடு மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றிற்கு ஸ்வர்ண புருஷ் லேகியம் பயன்படும் நரம்புகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் ஒரு ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாடு ஊக்குவிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது                    

தாயக்கட்டை

            தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும்.               கை-விரல்கள்-மூளைகளுக்கான வேலையைச் செய்யும் ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையில் உண்டு. இரு கைகளாலும் உருட்டி போடும் போது தொடக்கத்திலேயே மூளையை தூண்டும் பயிற்சி கிடைத்துவிடுகிறது.