அருகம்புல்லின் நன்மைகள்
1. அருகம்புல் பொடி
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி .
2. பெண்களுக்கு
மாதவிடாய் கோளாறுகள், இரத்தப்புற்று
நோய், இருமல், வயிற்று
வலி, மூட்டு வலி ஆகியவை குணமாகும்.
3. வயிற்றுப்
புண், இரத்த அழுத்தம் (பீ.பி), நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்..
4. சளி, சைனஸ், ஆஸ்துமா , நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை
நீங்கும்.
5. மலச்சிக்கல்
நீங்கும். ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த
மருந்தாகும்
2. அருகம்புல் வேரை நிழலில் காயவைத்து பொடி
செய்து நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி அந்த எண்ணையை தலையில் தேய்த்தால் தலையில்
உண்டாகும் பேன், பொடுகு போன்றவை நீங்கும்.
3. அருகம்புல்லை
சிறிதளவு எடுத்து அதை நீர்விட்டு காய்ச்சி அதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து
குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் மற்றும் சிறுநீர்ப்பை சம்பந்தமான
நோய்களும் குணமாகம்.
4. நகச்சுற்று
உள்ளவர்கள் அருகம்புல்லுடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து நகச்சுற்று
உள்ள இடத்தில் தடவினால் அதன் வலியும் வீக்கமும் குறையும்.
5. அருகம்புல்லுடன் அதே அளவு வேப்பிலையை எடுத்து நீர்விட்டு காய்ச்சி
அதை வடிகட்டி சிறிதளவு குடித்தால் தீராத வயிற்று வலி குணமாகும்.
6. உடல் பருமன் குறைவதற்கு அருகம்புல்லுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
அருகம்புல்சாரின் நன்மைகள் :
1. அருகம்புல்லில் நீர்விடாமல் சாறு எடுக்கவும். இதை 2 சொட்டு விடும்போது மூக்கில்
இருந்து வரும் ரத்தம் நிற்கும்.
2. அருகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கின்போது
ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.
3. அருகம்புல் சாறு 50 மில்லி எடுக்கவும். இதனுடன் புளிப்பில்லாத கெட்டி
தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை குடித்துவர வயிற்றுபோக்கு,
வெள்ளைப்போக்கு சரியாகும்.
·
4. அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து இதனுடன் மஞ்சள்
சேர்த்து நன்றாக கலந்து பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு,
படர்தாமரை, வியர்குரு சரியாகம். தோல்
நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள்,
சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது.
Comments
Post a Comment