பஞ்ச பாத்திரம் எனப்படுவது இந்து சமய கோயில்களிலும் , வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரமாகும் ஆரம்ப காலத்தில் பஞ்சபத்ரபாத்திரம் என அழைக்கப்பட்டது. ஆயினும் இன்று பஞ்ச பாத்திரம் எனும் பெயரில் அழைக்கப்படுகின்றது. இதில் ஐவகை இலைகளை இட்டுப் பூஜைக்குப் பயன்படுத்துவர். அவையாவன துளசி , அருகு , வேம்பு , வில்வம் , வன்னி என்பனவே. உத்திரிணி கரண்டி எனப்படும் கரண்டியின் மூலமாக பஞ்ச பாத்திரத்தில் உள்ள தீர்த்த நீர் பக்தர்களுக்கு தரப்படுகிறது . பொதுவாக பஞ்ச பாத்திரம் மற்றும் உத்திரிணி கரண்டி ஆகியவை செம்பினால் செய்யப்படுகின்றன. மகாளய அமாவாசையில் பஞ்ச பாத்திரம் ஆகியவற்றை தானம் வழங்குதலை நன்மையாக கருதுகிறார்கள். கணபதி ஹோமம் , நவ கிரக ஹோமம் , கிரஹா தனியார் மற்றும் பல போன்ற அனைத்து ஹோமம் மற்றும் புஜங்களுக்கும் பஞ்சா பத்திரம் பொதுவானது.