Skip to main content

Posts

முக்காலி

Recent posts

பூஜை கூடை

ஊதுவத்தி ஸ்டான்ட

பஞ்ச பாத்திரம்

                    பஞ்ச பாத்திரம் எனப்படுவது இந்து சமய கோயில்களிலும் , வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரமாகும் ஆரம்ப காலத்தில் பஞ்சபத்ரபாத்திரம் என அழைக்கப்பட்டது. ஆயினும் இன்று பஞ்ச பாத்திரம் எனும் பெயரில் அழைக்கப்படுகின்றது.        இதில் ஐவகை இலைகளை இட்டுப் பூஜைக்குப் பயன்படுத்துவர். அவையாவன துளசி , அருகு , வேம்பு , வில்வம் , வன்னி என்பனவே.        உத்திரிணி கரண்டி எனப்படும் கரண்டியின் மூலமாக பஞ்ச பாத்திரத்தில் உள்ள தீர்த்த நீர் பக்தர்களுக்கு தரப்படுகிறது . பொதுவாக பஞ்ச பாத்திரம் மற்றும் உத்திரிணி கரண்டி ஆகியவை செம்பினால் செய்யப்படுகின்றன.        மகாளய அமாவாசையில் பஞ்ச பாத்திரம் ஆகியவற்றை தானம் வழங்குதலை நன்மையாக கருதுகிறார்கள்.  கணபதி ஹோமம் ,  நவ கிரக ஹோமம் , கிரஹா தனியார் மற்றும் பல போன்ற அனைத்து ஹோமம் மற்றும் புஜங்களுக்கும் பஞ்சா பத்திரம் பொதுவானது.         

பூஜை பெல்

            இறைவனுக்கு பூஜை செய்யும்போது மணி அடிக்க வேண்டும் என்பது ஐதிகம். மணி அடிபதினால் துர்தேவதைகள் வெளியேறுகின்றனர் என்றும் கூறுகிறார்கள்.  மணி ஓசையினால் நாம் முழுவதுமாக இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.   

பூஜை தட்டு

                       பூஜை தொடங்கும் முன் அதற்குரிய பொருட்களை சரியான முறையில் வைப்பது அவசியம். பஞ்ச தத்துவங்களுக்குச் சமமான அடிப்படையில் பொருட்களை வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் பிரபஞ்சத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பஞ்ச பூதங்களோடு ஓரினப்படுத்த முடியும்.இதில் பூஜை தட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. பூஜை தட்டில் , மஞ்சள் , குங்குமம் முதலியவை பக்தரின் வலது பக்கத்திலும் , விபூதி , சிந்தூரம் முதலியவை இடது பக்கத்திலும் வைக்கப்பட வேண்டும்.     

ஆரத்தி விளக்கு

                           ஆரத்தி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தீபங்களை ஏற்றி வழிபடும் இந்து சமயத்திலுள்ள தெய்வ வழிபாட்டின் முறையாகும் . ஆரத்தி எடுக்கும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே பாரம்பரிய முறைப்படி , ஆரத்தி எடுக்கும்பொழுது பூக்கள் , நெய் அல்லது எண்ணெய் ஊற்றிய விளக்குகளை பயன்படுத்துவர்.   ஆரத்தி தட்டில் உள்ள விளக்குச்சுடர் என்பது தெய்வ சக்தியைக் குறிக்கிறது.